நான் என்னை காப்பாற்றிக் கொள்ள 1975-ஆம் ஆண்டுக்கு போகிறேன்.
நான் என்னை காப்பாற்றிக் கொள்ள 1975-ஆம் ஆண்டுக்கு போகிறேன்.
1. என் பெயர் மதியழகன். நான் கால பயணித்தின்(Time Travelling) மூலம் 2040-யிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். என் டிரவல் மிஷினில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக என்னால் திரும்பி, நான் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் 2040 ஆண்டுக்கு போக முடியாமல் 2018-யில் சிக்கிக் கொண்டேன். இப்போதுதான் என் டைம் டிரவல் இயத்திரத்தை சரி செய்து முடித்தேன்.
2. 2040-ஆண்டில் எனக்கு வயது 65. நான் என் 65-வது வயதிலிருந்து திரும்பி என் கடந்த காலமான 43-வது வயதுக்கு வந்திருக்கிறேன். 2018-2040 வரை 22 வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்கையை கடந்து, மீண்டும் 2018-க்கு வந்திருக்கிறேன்.
3. எதிர்கால(கடந்த) உலகின் மாற்றம், மகிழ்ச்சி, துக்கம், துயரம், சண்டை(போர்), துரோகம், சூழ்ச்சி பலவற்றை பார்த்து வந்திருக்கிறேன்.
4. 2040-இல் முகநூல் காலாவதியாகி விட்டது. ஆனால் வேறொரு தளம் உருவாகி இதே போல் வாய்க்கால் வரப்பு தகறாருகளும், ரத்தபூமியுமாக சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள். சண்டை முற்றி தோல்வி அடைந்தவர்கள் BLOCK செய்துவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகு அவர்களை கண்டுபிடிக்கவே முடியாது.
5. வாட்சாப் இல்லை. ஆனால் வாட்சாப் போன்று வேறு ஒரு வஸ்து உண்டு. போன் நம்பர் எல்லாம் கிடையாது. ஒன்லி ஐடிதான். அதன் மூலம் நீங்கள் வீடியோ கால் செய்யலாம். ஒருவரின் உருவத்தை எதிரே கொண்டு வரலாம். இன்று நேற்று நாளை படத்தில் ஆர்யா பேசுவது போல். உலகம் முழுக்க இண்டர்நெட் ஃப்ரி. எல்லாம் Unlimited data-தான். டாப் ஆப் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
6. அங்கேயும் ஆயா வடை சுட்ட கதைகளை இன்னும் ஃபார்வார்ட் மெஜேச்-ஆக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட் மார்னிங் மெஜேஜ்-களை பில்டர் செய்து விடுவார்கள். தேவை பட்டால் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.
7. கடாரம் பிடித்தான் ராஜ சோழன் என்று இன்றும் பெருமையோடு பேசி திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். மரத்துக்கு சேலை, அப்புறம் அதுக்கு ஒரு விளக்கு போட்டு, அவ்வழியே வந்த ஒருவருக்கு நம்பர் அடித்ததால் கூடாரம் கட்டி, கோவில் நிருவாகம் உருவாகி, பின்னார் பல கோஷ்டியாக உடைந்து போன 248 வருட கோவில் உடைப்பை எதிர்த்து பெரும் போராட்டம் எல்லாம் நடக்கிறது.
8. பட்டை தண்ணி போயி, சப்டை போத்தல் போயி புது பீர் வந்து விட்டது. நம்ம தமிழ் மக்கள் சாலையோரத்தில், ஆரோக்கிய விளையாட்டு மைதானம்(Taman Rekreasi)-யில் சட்டையெல்லாம் கழட்டி போட்டுவிட்டு, கார் ஸ்பீக்கரில் தமிழ்பாட்டை வேகமாக வைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலிஸ்-சும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.
9. 2040-இல் 124 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே உள்ளது. நம் தமிழ் குடும்பத்து குழந்தைகள் பெரும்பாலும் மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். மலாய் மற்றும் சீனப்பள்ளிக்கு பெரும்பாலான தமிழ் குடும்பத்து குழந்தைகள் செல்வதால், நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் வேண்டுமா என்று அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டு மலாய் மற்றும் சீனப்பள்ளிகளாக மாற்றம் வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து நம்மை சீண்டுவதாக நம் நாட்டில் உள்ள NGO-க்கள் ரத்தம் கொதிக்க தெருக்களில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
10. வீட்டுக்கு ஒரு NGO வந்துவிட்டது. லட்ச கணக்கான NGO தலைவர்கள் நம்மிடம் உண்டு. ஆண்டுக்கு 365 தமிழ்க்கல்வி மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
11. . சிறு NGO, பெரு NGO என இரன்டு பிரிவுகளாக NGO-கல் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரு NGO-கள் நன்றாக காக்கா பிடிக்க தெரிந்தவர்கள் என்பதால், யார் ஆட்சிக்கு வந்தாலும் கூஜா தூக்கி, கால்கள் கழுவி, சப்பாத்திக்கு கையிறு கட்டி விட்டு நல்ல சுகமாக வாழ்கிறார்கள். வெட்கமே இல்லாமல் எப்படி அரசியல்வாதிகள் கால்களில் விழுவது என நாடு முழுவதும் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
12. யார் அதிகமான கால்களை கழுவி விடுகிறார்களோ அவர்களுக்கு கூடுதல் பதவி, நல்ல கமிஷன் கொடுக்கப்படுகிறது.
13. 2036-ஆம் ஆண்டு நடந்த நாட்டின் 18-வது பொது தேர்தலில் கைரி தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. புதிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு(2040)-இல் நாட்டின் 19-வது பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மீண்டும் நமக்கு நான்கு முழு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருகிறார்கள்.
14. தமிழ் போராளிகள் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் சாய்ந்துக் கொள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் தாவிக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக கொரில்லா பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என எந்த பேதமும் இன்றி வாய்ப்புகளை தட்டிக் கொள்ள மரத்துக்கு மரம் தாவி குரங்கு வித்தை காட்டி கொண்டிருக்கிறார்கள்.
15. யார் எதிர்கட்சி, யார் ஆளும் கட்சி என தெரியாத அளவுக்கு எங்கும் ஒரே முகம். இங்கிருந்தவர்கள் அங்கே. அங்கிருந்தவர்கள் இங்கே. இந்தியர்களை பிரதிநிக்கும் ஒரே கட்சி ஐபிஃப் என கைரி புகழ்ததற்கு, மலேசிய தமிழர் கட்சி பெரும் ஆட்சேபனை தெரிவித்தது. மஇகா NGO-ஆக மாறிவிட்டது. டிஏபி முழுவதுமாக சீனர்கள் கட்சியாக மாறி, சம்பிரதாயமாக ஒரு சீக்கியர், ஒரு தமிழர், ஒரு தெலுங்கர், ஒரு மலையாளியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
16. பி.கே.ஆர் பல பிரிவுகளாக பிரிந்து போய் விட்டார்கள். அன்வார் நினைவாக ஒரு தனி அணி இன்னும் போராடி வருகிறது. அங்கிருந்த இந்தியர்கள் தனி தனி குழுக்களாக சிதறி போய் அங்காங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
17. மலாய்காரர்கள் மேலும் ஒற்றுமையாக மிகவும் வேகமாக வளர்ந்து வந்து விட்டார்கள். உயர்ந்த சமூகமாக மலாய் சமூகத்தை உலக மக்கள் பார்க்க தொடங்கி விட்டார்கள். மலாய்காரர்களின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பெருமிதமாக பார்க்கும் உலக மக்கள்; அவர்களை சிறந்த ரோல் மாடல்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.
18. மகாதீர் தொடங்கிய பெர்சத்து, மாட் சாபுவின் அமானா, கைரி தலைமையிலான கட்சி, அஸ்மின் தலைமையிலான பி.கே.ஆர் ஆகியவை மலாய்காரர்களின் முக்கிய கட்சியாக விளைங்கி வருகிறது.
19. டிவி திறந்தால் நமக்கு நிறைய ஆப்ஸ்கள்(Apps) வந்து விட்டது. எதை பார்ப்பது என்று நமக்கு ஒரே கன்பியூஸ். நிமிடத்துக்கு ஒரு ஆப்ஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய ஜாலித்தான் நமக்கு. கடைசியில் எதையும் பார்க்க மூட் இல்லாமல் டிவியை மூடிவிட வேண்டியதுதான். புது படங்கள் ரிலிஸ்-க்கு என்றே தனி ஆப்ஸ் வந்துவிட்டது. ரேடியோக்கள் கூட ஆப்ஸ்-யில் மட்டும்தான் கேட்க முடியும் என்றாகி விட்டது.
20. கடந்த மாதத்தில் விண்அழைகான்செல்(2040-இல் தமிழ் கலைசொல்) என்று அழைக்கப்படும் செட்லைட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடே செயல் இழந்துவிட்டது. இந்த கண்றாவிக்குதான் இணையத்தை நம்பாதீங்கன்னு கத்திகிட்டு இருந்தோம் கேட்டிங்களா என்று சமூக ஆர்வலர்கள் கத்தி கதறிக் கொண்டிருந்தார்கள்.
21. எல்லையற்ற தொடர்பில் உலகம் இயங்கி வந்தது. அனைத்தும் இணையம்தான். உலகமே கம்பியில்லா இணையத்தோடு இணைக்கப்பட்டிருநத்து. டிவி, ரேடியோ, வங்கி, அரசாங்க/தனியார் துறைகள், கல்வி கூடங்கள் அனைத்தும் இணையம் வழி சேவைத்தான். இணையம் அணைந்ததால் எல்லாம் அணைந்தது. ஒரு வாய் சாப்பாட்டுகே மக்கள் தவித்து போய் விட்டார்கள்.
22. Cash less என்று சொல்லி போனில் பார் கோட் கொண்டு வந்து, நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் போனில் உள்ள பார் கோட் மூலமாக ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி வாங்கி விடலாம். போன் இல்லாமல் மார்கெட் போய் கத்திரிகாய் கூட வாங்க முடியாது. இதனால் பொது மக்களுக்கு நன்மை என்றாலும்; தீமையே அதிகமாக இருகிறது. பொது தேர்தலுக்கு பிறகு நோட் ரிங்கிட் மீண்டும் வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
23. பிபிஆர் பிளட்டுகள் திட்டம் மீண்டும் புதுபிக்கக்கூடாது என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருகிறார்கள். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இந்திய குடும்பங்கள்தான். எஸ்டேட் போய் கம்பம் வந்தது. எஸ்டேட் தமிழன்-கம்பத்து தமிழன். கம்பம் போய் பிபிஆர் வந்தது. இப்போ பிபிஆர் தமிழன்.
24. சீனர்களும் மலாய்கார்கள் போன்று நமக்கும் தரைவீடுகள் கட்டி தரவேண்டும் என அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்னும் 3 மூன்று லட்சம் பிபிஆர் தமிழர்கள் நீல ஐசி இல்லாமல் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் கூறி வருகிறார். இந்த ஆண்டு நடக்கும் 19-வது பொது தேர்தலுக்கு பிறகு இப்படி பேசியதை எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வாய் திறப்பார்கள்.
25. ஜாதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டும், ஜாதிகளுக்கு எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே சிலர் தனியொரு ஜாதி எழுத்தாளர்கள் குழுவாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். நவீன இலக்கியம் என சொல்லிக் கொண்டு ஜாதியின் முகமாக இடையினம் குழு இயங்கி வருகிறது.
26. மலேசிய சினிமா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இந்திய தமிழ் சினிமாவுக்கு இணையாக நல்ல நல்ல கதைகளோடு மலேசிய தமிழ் சினிமா வெற்றி பெற்ற ஒரு வியாபார சந்தையாக உருவாகி உள்ளது. நிறைய இளைஞர்கள் நம்பிகையோடு சினிமாவுக்குள் வருகிறார்கள்.
27. ஆர்.டி.எம், ஆஸ்ட்ரோ முகத்தை வைத்துக் கொண்டு சினிமாவை சீரழித்தவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். புது புது இளைஞர் மலேசிய தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருகிறார்கள். நானும், இன்னும் சில நண்பர்களும் இணைந்துக் சினிமா கல்லூரி ஒன்று தொடங்கியுள்ளோம். எங்கள் சினிமா கல்லூரியில் படித்தவர்கள் கொரியாவில் போய் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
28. 2040-யில் நான் பெரிய எழுத்தாளனாக உள்ளேன். சினிமா ஜாம்புவானாக உள்ளேன். நான் உருவாக்கும் மலேசிய தமிழ் இளைஞர் கொரியா வரை போய் கலக்குவதை பொறுத்து கொள்ள முடியாத என் எதிரிகள் என்னை முடித்து கட்ட பார்க்கிறார்கள். டைம் டிரவல் மூலம் 1975-ஆம் ஆண்டுக்கு போய் நான் பிறக்காமல் செய்துவிட நினைக்கிறார்கள்.
29. நான் 1975-ஆம் ஆண்டு பிறக்கவில்லை என்றால், நான் 2040-யில் எழுத்தாளனாக இருக்க முடியாது. சினிமாவில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதனால் சினிமா கல்லூரி தொடங்கியிருக்க முடியாது. என் சினிமா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உலக தரத்துக்கு நகர முடியாது. ஆகவே நான் பிறக்க கூடாது என்று என் எதிரிகள் 1975-ஆம் ஆண்டுக்கு போயிருக்கிறார்கள்.
30. என்னை காப்பாற்றிக் கொள்ள இப்போது நான் 1975-ஆம் ஆண்டுக்கு போக வேண்டும். நான் பிறக்காமல் தடுப்பதை தடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் தோற்று விட்டால், நான் உங்கள் நினைவிலிருந்து முழுவதும் காணாமல் போய் விடுவேன்.
31. நாளை முதல் உங்களோடு நான் முகநூலில் இருக்க மாட்டேன். என்னை நீங்கள் எங்கும் தேட முடியாது. என்னுடன் படித்த என் நண்பர்கள் யாருக்கும் நான் நினைவில் இருக்க மாட்டேன். என்னுடன் வேலை செய்த யாருக்கும் நான் ஒருவன் வாழ்ந்தேன் என்பதே தெரியாது. என் நினைவுகளை அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். நான் பயணம் செய்த எந்த ஊரிலும் என் நினைவுகள் இருக்காது.
32. பிளாக்(வலைபக்கம்),முகநூல், வாட்சாப், டிவிட்டர், என்று எங்குமே நான் இருக்க மாட்டேன். இதன் மூலம் எனக்கு நண்பர்கள் ஆன யாருக்குமே என்னை தெரியாது. என் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, என் கூட பிறந்தவர்களுக்கு யாருக்குமே என்னை தெரியாது. என் வீட்டில் மூத்த மகன் என் தம்பியாக இருப்பான். என் மனைவிக்கு நான் யாரென்று தெரியாது. எனக்கு குழந்தைகள் பிறந்திருக்க மாட்டார்கள்.
33. என் பிள்ளைகளும் இந்த உலகத்திலிருந்து மறைந்து போவார்கள். அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்களுக்கும், யாருக்கும் அவர்களின் நினைவு இருக்காது. என் மூலம் ஏற்பட்ட அனைத்து உறவுகளும் மாறி போயிருக்கும். ஒரு சிறு சம்பவத்தை தடுப்பதன் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து விடும். அது ஒரு ஊரையோ, நாட்டையோ உலகத்தின் போக்கையோ கூட மாற்றலாம்.
34. நாளைக்கு நீங்கள் முகநூல் வந்து பார்க்கும் போது என் நினைவு உங்களுக்கு வந்தால், வாட்சாப் திறக்கும் போது என் நினைவு உங்களுக்கு வந்தால், நான் என் எதிரிகளை அழித்து வெற்றி பெற்று விட்டேன் என்பதனை அறிக. நான் ஜெயித்து விட்டேன். பிறந்து விட்டேன். 2040-யில் நான் திமிரோடு அலைந்துக் கொண்டிருப்பேன்; ஒரு எழுத்தாளனாக, சினிமாகாரனாக. நான் எழுதிய அனைத்தும் நடந்திருக்கும்.
35. மார்ச் 13, 1975-ஆம் நாளுக்கு நான் போகிறேன். என்னை காப்பாற்றிக் கொள்ள. நான் பிறப்பதை உறுதி செய்ய.
பி.கு.
இந்த சம்பவத்தை நான் 2040-யில் எழுதி, 1975-ஆம் ஆண்டுக்கு போகும் வழியில், 2018-ஆம் ஆண்டு இறங்கி போஸ்ட் செய்து விட்டு 1975-ஆம் ஆண்டுக்கு போய் கொண்டிருக்கிறேன்.
0 Comments