Saturday, 3 December 2022

கேமரன் மலையும் சிம்மாதிரியும்.

4 டிசம்பர் 2018-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை.

1. கேமரன் மலை தனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான 2004 மற்றும் 2008-யில் நடந்த இரண்டு தேர்தலிலும் பாரிசான் வேட்பாளர் தேவமணியை எதிர்த்து நின்றவர் சிம்மாதிரி. இந்த இரண்டு தேர்தலிலும் கணிசமான ஓட்டுகளை வாங்கி தேவமணிக்கு கடுமையான போட்டியை கொடுத்தவர்.

2. 2008-ஆம் ஆண்டு வரை எதிர்கட்சி சார்ப்பில் பொது தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அதுவும் DAP சீட் எல்லாம் சீப்படும். கிடைப்பவர்களை எல்லாம் நிற்க வைப்பார்கள். ஆனால் கேமரன் மலையை பொறுத்தவரையில் சிம்மாதிரி உள்ளூர் தலைவராக மட்டும் இருக்கவில்லை. கேமரன் மலையின் நாடி துடிப்பை பார்த்தவர். 

3. ஆள் கிடைக்காமல் போட்டியிட நிற்கவைக்கப்பட்ட தலைவர் அல்ல சிம்மாதிரி. தன் சொந்த காசை செலவழித்து கேமரன் தொகுதியில் தனக்கான ஒரு செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தார். இரண்டு தேர்தலிலும் தன் சொந்த செல்வாக்கின் மூலம் கணிசமான ஓட்டுக்களை சேகரித்து வைத்திருந்தார்.

4. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு பிறகு எதிர்கட்சிகளின் சீட்-க்கு மவுசு ஏற்பட்டது. இதன் பிறகு சீட்கள் ஒதுக்குவதில் DAP தன் இன பாகுபிரிவினையை காட்டியது. சீனர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதை தன் நோக்கமாக கொண்டிருந்தது DAP. 

5. இதை அமுல்படுத்த 2013-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சீட்-கள் பிரிப்பதில் DAP ஏகப்பட்ட தந்திரங்களை செய்தது. இந்தியர்களின் செல்வாக்கை உடைக்கும் விதமாக DAP பல சீட்-களை இடம் மாற்றி வைத்தார்கள். அதில் பல இந்திய தலைவர்களின் பெயர்கள் தூக்கியடிக்கப்பட்டது.

6. DAP-யின் இந்த தூக்கியடிக்கும் நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டது கேமரன் மலையும், சிம்மாதிரியும்தான். தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிட்ட மனோகரனை தூக்கி கேமரன் மலையில் போட்டார்கள். தெலுக் இந்தான் தொகுதியை சீனருக்கு கொடுத்தார்கள்.

7. முதல் இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றதால் கேமரன் பாரிசானின் கோட்டையாக பார்க்கப்பட்டது. அதனால் தன்னை தற்காத்து கொள்ள பழனிவேலு கேமரன் மலைக்கு வந்தார். ஆனால் DAP மனோகரனை பழனிக்கு எதிராக கொண்டு வந்தார்கள். இதுதான் DAP செய்த மிகபெரிய தவறு. 

8. DAP மனோகரனை தோற்கடித்து பழனி வெற்றி பெற்றார். ஆனால் சிம்மாதிரி நிறுத்தியிருந்தால் 2013-இல் கேமரன் மலை பாரிசான் கையை விட்டு போயிருக்கும். பழனியை சிம்மாதிரி தோற்கடித்திருப்பார். 

9. கடந்த 14-வது பொது தேர்தலில் மீண்டும் மனோகரனே கேமரன் மலையில் DAP நிறுத்தியது. எங்கிருந்தோ வந்த சிவராஜ் வெற்றி பெற்றதற்கு மனோகரன் மீண்டும் போட்டியிட்டதே காரணம்.

10. மனோகரன் நல்ல மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேமரன் மலையில் போட்டியிட அவர் சரியான தேர்வு கிடையாது.  அதற்கு முக்கிய காரணம், தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதி பக்கம் செல்லும் வழக்கம் கொண்டவர் மனோ. அதைவிட முக்கியம் உள்ளூர் DAP தலைவர்களோடு வேலை செய்யும் பக்குவம் அவரிடம் இல்லை.

11. சீனர்கள் மற்றும் ஓராங் அஸ்லிகளின் ஓட்டை மட்டுமே மனோகரன் நம்பினார். இந்தியர் ஓட்டை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இதுவே இரண்டு முறையும் கேமரன் மலையில் மனோகரன் தோல்வியடைந்ததற்கு அதிமுக்கிய காரணமாக அமைந்தது.

12. கேமரன் மலை சிம்மாதிரியின் தொகுதி. அது ஞாயமாக சிம்மாதிரிக்கே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் DAP-யில் இருக்கும் எந்த இந்திய தலைவர்களும் சிம்மாதிரிக்கு ஆதரவாக பேச முன் வரவில்லை.

13. மனோகரனின் தெலுக் இந்தான் தொகுதியை பிடுங்கி சீனருக்கு கொடுத்த போதும், DAP இந்திய தலைவர்கள் அனைவரும் வாய்மூடி ஊமைகளாக இருந்தார்கள். கேமரன் மலையை சிம்மாதியிடம் இருந்து பிடுங்கி மனோகரனுக்கு கொடுத்த போதும், எல்லோரும் வாய் மூடி கொண்டு இருந்தார்கள்.

14. சிம்மாதிரி DAP கட்சியின் மூத்த தலைவர். DAP கட்சிகாக தொடர்ந்து உழைத்து வருபவர். அவருக்கு சீட் கிடைக்காத போது, DAP இந்தியர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டும். ஒரு இந்தியருக்கு பாதிப்பு வரும்போது, மற்ற இந்தியர்கள் தைரியமாக முன் வந்து குரல் கொடுத்திருக்க வேண்டும். 

15. ஆனால் DAP-யில் இருக்கும் இந்திய தலைவர்களுக்கு தங்கள் பதவியே முக்கியம். வாய் திறந்தால் பதவி பறிக்கப்படும் என்று பயந்துக் கொண்டு அப்பாவுக்கும் மகனுக்கும் அடிமையாக இருகிறார்கள்.

16. மஇகா தலைவர்களுக்கும், DAP-யில் இருக்கும் இந்திய தலைவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. பதவி மோகத்தில் அடிமைகளாக வாழ பழகிக் கொண்டவர்கள். தங்கள் பதவிக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

17. இந்த நேரத்தில் 80-களில் நடந்த ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. பொது தேர்தலில் போட்டியிட இந்திய தலைவர்களின் பெயர் பட்டியலை DAP தலைமையகத்திற்கு DAP இந்தியர்களின் சார்ப்பில் கொடுக்கப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள சில இந்திய தலைவர்களுக்கு சீட் கொடுக்க தலைமை மறுத்தது.

18. தாங்கள் கொடுக்கும் பட்டியலில் ஒரு இந்திய தலைவரின் பெயர் விடுபட்டாலும்; தாங்கள் யாருமே பொது தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று உறுதியாக கூறினர். வேறு வழி இல்லாமல் அத்துனை இந்தியர்களுக்கும் DAP சார்ப்பில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. இந்த மாதிரியான நேர்மையான, சமூக அக்கறையுள்ள இந்திய தலைவர்கள் இன்று DAP யாரும் இல்லை. 

19. DAP-யில் இருக்கும் அத்துனை சீன/இந்திய தலைவர்கள் அனைவருக்கும் தெரியும் கேமரன் மலைக்கு சரியான வேட்பாளர் சிம்மாதிரிதான் என்று. சிம்மாதிரிக்கு கிடைக்க வேண்டியதை ஞாயமாக கேட்டு வாங்கி கொடுக்க வேண்டும்.

20. மனோகரனின் தொகுதி தெலுக் இந்தான். மனோகரன் தெலுக் இந்தானை போராடி பெற வேண்டும். சிம்மாதிரியின் தொகுதியை பிடுங்கிக் கொள்ள கூடாது. கேமரன் மலையில் போட்டியிட மனோகரனை DAP கேட்டுக் கொண்ட போது; மனோகரன் அதை மறுத்திருக்க வேண்டும். அதுவே ஞாயமான ஒரு மனிதன் செய்யக்கூடியது.

21. DAP கட்சியில் நேர்மை கொஞ்சமாவது இருந்தால், மிக நீண்ட காலமாக கட்சிக்காக போராடிவரும் சிம்மாதிரிக்கு கேமரன் மலையில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மனோகரனை நிறுத்தி மீண்டும் தலையில் மண்ணை போட்டுக் கொள்ளாமல் இருந்தால் சரி.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews