Thursday, 12 May 2022

செடிக் ஊழல்க்கள்

செடிக் ஊழல்க்கள்

இது ஒரு நீண்ட கட்டுரை. பொறுமை இல்லாதவர்கள், அவசரகதியில் இருப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை நீங்கள் கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும். ஊழல்கள் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற தெளிவான சிந்தனையை பெற வேண்டும்.

1. The Socioeconomic Development of Indian Community Unit என்பதுதான் SEDIC என்பதன் சுருக்கம். தமிழில் மலேசிய இந்திய சமூகப் பொருளாதர மேம்பாட்டுத் திட்ட பிரிவு என்று அழைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

2. செடிக் மூலம் இந்திய சமூக பொருளாதர மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் இந்த சமூகம் பொருளாதர உயர்வு பெற வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். ஆனால் செடிக் மூலம் இந்திய சமூக பொருளாதரம் உயர்ந்துள்ளதா? அல்லது சமூக பொருளாதர திட்டங்களை எதனையும் அமுல்ப்படுத்தியுள்ளார்களா?

3. செடிக் என்பது முழுக்க முழுக்க பாரிசான் அரசாங்கத்தையும் முன்னாள் பிரதமர் நஜிப்-பையும் ஆதரிக்க அறிமுகம் செய்யப்பட்டது. செடிக்-கின் பங்கு நஜிப்-க்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். அதையாவது அவர்கள் சரியாக செய்தார்களா? 

4. அரசு சாரா இயக்கங்களுக்கு(NGO) செடிக் மூலம் நிதிகளை கொடுத்து பாரிசானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்துள்ளார்கள். செடிக் மூலம் பணம் கிடைக்கிறது என்றவுடன் மஇகா தலைவர்களும், அவர்கள் சார்ந்தவர்களும் புதிய NGO-க்களை பதிவு செய்து மானியங்களை பெற ஆரம்பித்தார்கள். 

5. பாரிசான் அரசாங்கத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த My Skill Foundation பசுபதி, EWRF நாதன் போன்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சேனல்கள் மூலம் செடிக்-க்கிடமிருந்து மில்லியன்களில் மான்யம் பெற்றனர். இப்போது பக்காத்தான் ஆட்சிக்கு வந்து விட்டதால், இவர்கள் மீண்டும் பக்காத்தானுக்கு திரும்பலாம். அங்கே இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளலாம்.

6. பாரிசான் ஆதரவாளர்கள் மட்டும் இல்லாமல், பாரிசான் ஆட்சிக்கு எதிராக இருந்த பலரும்கூட செடிக் பிரிவில் மானியத்திற்கு மனுபோட்டார்கள். பாரிசானை ஆதரிக்க வேண்டும்; நஜிப்-க்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற கட்டாய கட்டளையோடு மானியம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

7. செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்ட இந்திய சமூக இயக்கங்கள் இரண்டு விதமான கொள்கையை கடைப்பிடித்தனர். ஒரு சாரார் பாரிசானுக்கும் நஜிப்புக்கும் ஆதரவாக செயல்ப்பட தொடங்கினர். இன்னொரு சாரார் பாரிசானை எதிர்க்காமல் அடங்கி போனார்கள்.

8. பணத்துக்காக சோரம் போகும் இனம் நம்மினம் என்று மீண்டும் நிரூப்பிக்கப்பட்டது. இந்திய சமூகத்தை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்கிற அம்னோவின் எண்ணம் அப்படியே நடந்தது. செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு பாரிசானுக்கும் நஜிப்-க்கும் ஆதரவாக செயல்பட ஆரம்பித்த்னர்.

9. வெளியில் இருந்து பார்க்கும் போது; இந்திய சமூகம் முழுக்க நஜிப்பின் பாரிசான் அரசாங்கத்தை ஆதரிப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்திய சமூகம் 100 விழுக்காடு பாரிசானுக்கு ஆதரவாக இருப்பது போல் மாயையை உருவாக்கினார்கள்.

10. இந்த மாய தோற்றத்தை பார்த்த துன் மகாதீர், ஆரம்பத்தில் இந்திய சமூகம் பாரிசானுக்கு ஆதரவாக இருப்பது போல் உணர்ந்தார். ஆகவே இந்தியர்களின் ஆதரவை துன் மகாதீர் பெரிதும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட துன் மகாதீர் ஹிண்ட்ராப் அணியை பக்காதானுக்கு ஆதரவாக உள்ளிழுத்துக் கொண்டார். 

11. மஇகாகாரர்களும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் இந்தியர்களின் ஓட்டு பாரிசானுக்குதான் விழும் என்று கணக்கு காட்டி நஜிப்-ப்பை ஏமாற்றினார்கள். என்.எஸ்.ராஜேந்திரனின் கணக்கைப் பார்த்து ஏமாந்து போன நஜிப் மேலும் இன்னும் அதிகமான மில்லியன்களை கொடுத்தார். இந்த காலகட்டத்தில் மஇகா தலைவர்கள் அனைவரும், MIVA,NAAM,Power Malaysia போன்று ஆளுக்கொரு NGO திறந்துக் கொண்டு பணத்தை சுருட்ட ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ராஜேந்திரனும் துணை போனார்.

12. பணம் வந்ததும் என்.எஸ்.ராஜேந்திரனுக்கு போதை வந்தது. செனட்டர், அமைச்சர் பதவி மீது கண் விழுந்தது. இந்த தேர்தலுக்கு பிறகு அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்த தொடங்கினார்.

13. செடிக் மூலம் நிதி வழங்கப்பட்ட NGO நிகழ்ச்சிகளில் நஜிப் படத்திற்கு இணையாக தன்னுடைய படமும் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். மேடையில் புகழ்ந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

14. பணத்துக்காக மட்டுமே NGO ஆரம்பித்த சமூக இயக்கங்களும், சமூக தலைவர்களும் என்.எஸ்.ராஜேந்திரனை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஊரில் உள்ள பல நல்லவர்களும் செடிக் மூலம் நிதியை வாங்கிக் கொண்டு பாரிசானையும், நஜிப்பையும், என்.எஸ்.ராஜேந்திரனையும் புகழ்ந்து பேச தொடங்கினார்கள். பார்ப்பதற்கே ரொம்பவும் அசிங்கமாக இருந்தது.

15. பாரிசானையும் ராஜேந்திரனையும் ஆதரிக்காதவர்களுக்கு செடிக் மூலம் மானியம் கொடுக்கப்படவில்லை. அல்லது கொடுக்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது.

16. அனைத்து மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கங்களின் பேரவை ஆண்டு கூட்டத்தில் அதன் தலைவர் ராஜரத்தினம், ‘முன்பு இருந்த பிரதமர்(மகாதீர்) கிள்ளி கொடுத்தார், தற்போதைய பிரதமர்(நஜிப்) அள்ளி கொடுக்கிறார்கள். நாம் இந்த பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்று பேசினார். முதல் ஆண்டு 80 ஆயிரம் வெள்ளியும், மறு ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேல் கொடுக்கப்பட்டது. கொடுத்த காசுக்கும் மேல் கூவினார்கள்.

17. வாட்சாப் மூலம் தினமும் காலையில் Good Morning வாழ்த்து அனுப்புவதற்கு 2 லட்சத்துக்கும் மேல் ஒரு NGO-க்கு ஒதுக்கி கொடுத்தார் ராஜேந்திரன். வாட்சாப்-இல் வாழ்த்து அனுப்புவது சமூக பொருளாதர மேம்பாட்டு திட்டம்.

18. 2016-ம் ஆண்டு தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்கிற இயக்கம் ஆரம்பித்தார்கள். அதற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணம் செடிக் மூலம் கொடுப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை பள்ளியில் பதிந்திருப்பார்கள். இவர்கள் யாருக்காக இந்த பிரச்சாரததை செய்தார்கள் என்று தெரியவில்லை.

19. 10 லட்சம் வெள்ளி செலவு செய்து, அந்த ஆண்டு 130 மாணவர்கள்தான் தேசிய நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பது நமது உணர்வு. அதை தமிழ்ப்பள்ளியில் நின்று கூவிக் கொண்டிருக்க கூடாது. மலாய் பள்ளி வாசல்களிலும், வீடமைப்பு பகுதிகளுக்கும் போய் அந்த உணர்வை தூண்டிருக்க வேண்டும். 

20. ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தங்கள் குழந்தையை பதிந்தவர்களின் பெற்றோர்கள்தாம் தமிழ்ப்பள்ளிக்கு வருவார்கள். அங்கே நின்று கொண்டு, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்று பேனர்களும், போஸ்டர்களும், அறிக்கையும் கொடுத்துக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன நன்மை. 10 மில்லியனை நாசம் செய்தார்கள். இதற்கு ராஜேந்திரனும் உடந்தை.

21. செடிக் வைத்துக் கொண்டு இவர்கள் சேவை செய்யவில்லை. சமூக பொருளாதர மேம்பாட்டை கொண்டு வரவில்லை. மாறாக இவர்களின் பொருளாதர மேம்பாட்டை சரிவர செய்துக் கொண்டார்கள். 

22. செடிக் மூலம் பணத்தை காட்டி பாரிசானுக்கும் நஜிப்புக்கும் ஓட்டு சேர்ந்தார்கள். ஆனால் நடந்த முடிந்த 14-வது தேர்தலில் எதுவும் பலிக்கவில்லை. மலேசிய இந்தியர்கள் ஒரு தெளிவான முடிவு எடுத்தார்கள். 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்களின் ஓட்டு பக்காத்தானுக்கு விழுந்தது. 

23. தன்மானம், சமூக உணர்வு, வெட்கம் இல்லாதவர்கள் செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு முன்னாள் ஆளும் கட்சியான பாரிசனுக்கும் நஜிப்புக்கும் வாலை ஆட்டிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தமிழர்கள் தன்மானம் உள்ளவர்கள். பணத்தால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை நிருப்பித்துள்ளார்கள்.

24. வேசம் போடும் சில/பல நல்லவர்களை இந்த செடிக் அடையாளம் காட்டியுள்ளது.

25. The Socioeconomic Development of Indian Community Unit(SEDIC)/மலேசிய இந்திய சமூகப் பொருளாதர மேம்பாட்டுத் திட்ட பிரிவுவில்(செடிக்) பல முறைகேடுகளும் அதிகார மீறல்களும் நடந்துள்ளது. முறையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

25. இது மாற்றத்தை விருப்பும் அடுத்த தலைமுறையினருக்கு புது உத்வேகத்தையும், தன்நம்பிக்கையும் கொடுக்கும். யாரையும் காக்கா பிடித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்கிற தன்முனைப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

26. ஏமாற்றியும் ஊழல் செய்தும் பிழைப்பது அறம் இல்லை என்பது நம் அடுத்த தலைமுறையினருக்கு கற்று தரவேண்டும். ஊழல் இல்லாத சமூகம் உருவாக்க வேண்டும் என்றால் ராஜேந்திரன் போன்ற அதிகாரிகளும்; சரவணன், டி.மோகன், விக்னேஸ்வரன் போன்ற மஇகா தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதனை நம் அடுத்த தலைமுறையினர் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.

27. ஊழல் பணத்தில் வாழ்வது மகா குற்றம் என்று அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். புதிய சமூக உருமாற்றத்திற்கு தயாராவோம். நேர்மையாக உழைக்கும் சமூகத்தை உருவாக்குவேம். அடுத்த தலைமுறைக்கு நாம் உதாரணமாக இருப்போம்.

28. ஊழல் மீது நடவடிக்கை எடுப்பது, பழிவாங்கும் செயல் அல்ல. அவர்கள் செய்த தவறுக்களுக்கு கொடுப்படும் தண்டனை. அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுக்கும் பாடம். 

29. ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் பெறும் வீழ்ச்சி அடைவார்கள். ஊழல் என்பது ஒரு பண்பாட்டு கூறு, பணம் சம்பாதிப்பதற்கான வழிகளில் ஊழலும் ஒன்று என்பது அவர்களின் மனதில் நிலைநிறுப்பத்தபடும்.

30. ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் சமூககேடு என்பதனை உணர்த்தவும், ஊழல் சமூக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதனையும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் புரியவைக்க வேண்டும். 

31. செடிக் முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். பக்காத்தான் மற்றும் பாரிசான் கட்சியில் இருக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். இந்திய நலன் சார்ந்த அரசாங்க அதிகாரிகள் இனியும் நேர்மையாக இருக்க வேண்டும். 

32. பணத்துக்கு விலை போகும் இனம் தமிழினம் இல்லை என்பது அடையாளப்படுத்த வேண்டும். இந்த நாட்டில் வாழும் மற்ற இனத்திற்கு முன் நாமும் தன்மானமாக, நெஞ்சு உயர்த்தி நடை போட வேண்டும்.

13 மே 2018

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews